கையும் களவுமாக சிக்கிய பெண்.. தொக்காக தூக்கிய போலீஸ்

x

நாகையில் சட்டவிரோதமாக மதுபானங்களை கடத்தி விற்பனை செய்து வந்த பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்தனர். வெளிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நாகை, மருந்து கொத்தள தெருவை சேர்ந்த சரிதா என்ற பெண்ணை கைது செய்தனர். விசாரணையில், அவர் காரைக்காலில் இருந்து சட்டவிரோதமாக மதுபானம் வாங்கி விற்பனை செய்து வருவது தெரியவர, பெண்ணிடம் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை கைப்பற்றிய போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்