சுய உதவிக் குழு வங்கி கணக்கில் இருந்து மாயமான பணம் - புதுக்கோட்டையில் அதிர்ச்சி

x

புதுக்கோட்டையில் சுய உதவிக் குழு வங்கி கணக்கில் இருந்த பணம் மாயமானது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது...

புதுக்கோட்டை மாவட்டம் பகட்டுவோன்பட்டி கிராமத்தில் உள்ள பெண்கள் கடந்த 2009-ஆம் ஆண்டில் சுய உதவிக் குழு தொடங்கி நடத்தி வருகின்றனர். இவர்கள் கந்தர்வகோட்டை வங்கியில் கணக்கு தொடங்கி பராமரித்து வரும் நிலையில், அதில் இருந்த பணம் மாயமானது அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து வங்கி மேலாளரிடம் கேட்ட போது, சுய உதவி குழுவிற்காக வாங்கிய கடனுக்காக பணம் எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, நிர்வாகிகளுக்கு தெரியாமல் பணத்தை எப்படி எடுக்கலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள், இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்