மாயமான மாஜி டெப்ட்டி கமிஷனர்...தந்தையை கண்டுபிடிக்க மகன் கொடுத்த புகார்

x

சென்னை வளசரவாக்கம் வாணி நகரை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற காவல் துறை துணை ஆணையர் வள்ளிநாயகம். 72 வயதான இவர், கடந்த 2011ஆம் ஆண்டு பரங்கிமலை துணை ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்றார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற வள்ளிநாயகம் இரவு வரை வீடு திரும்பாத‌தால், பதற்றமடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, அவரது மகன் முத்துக்குமார், காணாமல் போன தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், காணாமல் போன ஓய்வுபெற்ற காவல் துணை ஆணையர் வள்ளிநாயகத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்