தனியார் நிறுவன காவலாளி மர்ம மரணம்... விசாரணையில் வெளியான திடுக் தகவல் | Private Security Guard

x

#PrivateSecurityGuard #kaniyakumari #police #thanthitv

தனியார் நிறுவன காவலாளி மர்ம மரணம்... விசாரணையில் வெளியான திடுக் தகவல் | Private Security Guard

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான் கடை சிலோன் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். 60 வயது முதியவரான இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி வீட்டின் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கை சந்தேக மரணம் என பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், உடற்கூராய்வின் முடிவில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த முதியவர், அதே பகுதியை சேர்ந்த மெல்வின் என்ற இளைஞரை அவதூறாக பேசியதால், இளைஞரே முதியவரை சுத்தியலால் அடித்துக் கொண்றதும், பின்னர் அவரே மருத்துவமனையில் அனுமதித்து நாடகமாடியதும் தெரியவந்தது. இந்நிலையில், வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த போலீசார், இளைஞர் மெல்வினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்