மாயமான சிறுவன் .. அடித்தே கொன்று; மூட்டைக்கட்டிய இளம்பெண்.. நடுங்கவைக்கும் சம்பவம்

x

கும்மிடிப்பூண்டி அருகே மாயமான 8 வயது சிறுவன், ஆந்திராவுக்கு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் - சிந்துமதி தம்பதியரின் 8 வயது மகன் அனிஷ். 2-ஆம் வகுப்பு படித்து வந்த அனிஷ், கடந்த 16ஆம் தேதி மாயமானார். இதைத் தொடர்ந்து 17ஆம் தேதி, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சிறுவனின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், சிறுவனை அழைத்துச் சென்றதாக கூறப்பட்ட அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ரேகாவை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, மற்றொரு நபருடன் சேர்ந்து அனிஷ்யை அடித்து கொலை செய்து, மூட்டையில் கட்டி ஆந்திர மாநிலம் வரதையாபாளையம் அருகே ஒரு முள்புதரில் வீசியதை கண்டுபிடித்து உடலை மீட்டனர். இந்த தகவல் அறிந்த‌தும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ரேகாவின் வீட்டை அடித்து பொருட்களை சேதப்படுத்தினர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். கொலை குறித்து ரேகாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்