கூட்டமாக மனுவை அடுக்கிய இஸ்லாமியர்கள் - அமைச்சர் சொன்ன ஒரு வார்த்தை..

x

கூட்டமாக மனுவை அடுக்கிய இஸ்லாமியர்கள் - அமைச்சர் சொன்ன ஒரு வார்த்தை..

#erode #muthusamy #campaign #electioncampaign #election2024 #thanthitv #dmk

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். அன்னை சத்யா நகர், அக்ரஹாரம், பெருமாள்மலை, ஆரன் புதூர், சி.எம். காலனி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தனர். ஆர்.என். புதூர் பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் மசூதியின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து இஸ்லாமியர்கள் அமைச்சர் முத்துசாமியிடம் தனித் தனியாக மனு அளித்தனர். அவர்களிடம் தேர்தல் முடிந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி வாக்குறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்