கொலையாக மாறிய குடும்பத் தகராறு | சரமாரியாக வெட்டிக் கொன்ற கொடூரம்

x

தென்காசி ரயில் நிலையம் அருகேயுள்ள, எல்.ஆர்.எஸ் பாளையத்தை சேர்ந்தவர் வினோத். 27 வயதான இவர் வெல்டிங் வேலை செய்து வந்த நிலையில், வினோத்துக்கும் அவரது உறவினரான இசக்கி ராஜாவுக்கு குடும்பத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவில் பணி முடிந்து வீடு திரும்பிய வினோத்தை, இசக்கி ராஜா மதுபோதையில் தன் நண்பருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த இசக்கி ராஜாவையும், அவரது நண்பரான காசி விஸ்வநாதனையும் போலீசார் கைது செய்த நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்