நண்பனே, நண்பனை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம்! - அதிரடி வேட்டையில் இறங்கிய போலீஸ்

x

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள ஆசாரி பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். இவருக்கு திருமணமான நிலையில், இவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்தவரும் தன் நண்பருமான கிரிஸ்டோவினிஸ் என்பவருடன் சேர்ந்து லாரன்ஸ் மது அருந்திய நிலையில், இருவருக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மறைத்து வைத்திருந்த கத்தியால் லாரன்ஸை குத்திக் கொன்ற கிரிஸ்டோவினிஸ் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லாரன்ஸின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில், கிரிஸ்டோவினிஸ் மீது ஐந்துக்கும் மேற்பட வழக்குகள் காவல்நிலையத்தில் நிலுவையில் இருப்பது தெரியவர, தலைமறைவாக உள்ள கிரிஸ்டோவினிஸை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்