"முனியப்பன் கோவிலை சூறையாடிய வனத்துறையினர்" - கொதிக்கும் ஊர் மக்கள்

x

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே முனியப்பன் கோவிலை வனத்துறையினர் சூறையாடிய சம்பவம் ஊர்மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் கோவில் உண்டியலை உடைத்த வனத்துறையினர், பூஜை பொருட்களையும் சூறையாடி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வனத்துறை நிலத்தில் கோவில் அமைந்திருப்பதாக கூறி நோட்டீஸ் கூட வழங்காமல் சூறையாடி சென்றதாக வனத்துறை மீது ஊர் மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்