அசுர வேகத்தில் வந்த லாரி..! தலை நசுங்கி உயிரிழந்த தாய்,மகன்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

x

தூத்துக்குடி அருகே சாலையை கடக்க முயன்ற தாயும் மகனும், லாரி மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி முத்தையாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பெண் ஒருவர், 8- வயது மதிக்கத்தக்க மகனுடன் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது லாரி மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லாரியின் ஓட்டுனர் சுரேஷை கைது செய்துள்ள போலீசார், இறந்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்