"மொத்தமா அழிஞ்சு போச்சு"- கலங்கி நிற்கும் திருவாரூர் விவசாயிகள்

x
  • திருவாரூர் அருகே, ஆயிரம் ஏக்கர் தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்..
  • திருவாரூர் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில், 30 நாட்கள் ஆன நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மேலமணலி, கருப்பூர், ஈழகொண்டான், நொச்சிக்குடி உள்ளிட்ட கிராம விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நெற்பயிர்கள் அழுகும் சூழல் உருவாகியுள்ளதால், கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் செய்வது அறியாது கண்ணீர் வடித்து வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்