50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்..சிவகங்கையில் அதிர்ச்சி | Sivagangai | Tamilnadu

x

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 55 பேர் காய்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது. காய்ச்சல் பாதிப்பு குழந்தைகளுக்கு அதிக அளவில் பரவி வருவதாகவும் போதிய அளவு மருந்து மாத்திரைகள் கையிருப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தினமும் காய்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்