முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு - 1071 வட இந்திய வாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

x

தங்கசாலை தெருவில், சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் கிழக்கு பகுதி 57-வது வட்டத்தில் உள்ள ஆயிரத்து 71 வட இந்திய வாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் மூர்த்தி மற்றும் மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய எம்பி தயாநிதிமாறன், பாஜக சமுதாயத்தில் பிரச்சனையை உருவாக்க பார்க்கிறது என்று கூறினார். சீதா -அக்பர் என்ற இரு சிங்கங்களும், ஒன்று சேரக்கூடாது என்பதற்காக பாஜகவினர் கல்கத்தா நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்ததாக குற்றம்சாட்டினார்


Next Story

மேலும் செய்திகள்