"முதல்வர் வீட்டுலையும் உங்க தயாரிப்பு தான்".. மேடையில் அமைச்சர் உதயநிதி மாஸ் ஸ்பீச்

x

ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 337 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வங்கிக் கடனாக 100 கோடியே 34 லட்சம் ரூபாய் வழங்கினார். தொடர்ந்து மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்களை தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயார் செய்யும் பொருட்களைத்தான் தானும் முதல்வரும் பெரும்பாலும் பயன்படுத்தி வருவதாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்