அமைச்சர் திடீர் ஆய்வு - மாட்டிக்கொண்டு முழித்த மருத்துவர்கள்

x

மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், பணியில் இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்திலுள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தையை பெற்றெடுத்த பெண் ஒருவருக்கு, அவர் ஆயிரத்து 500 ரூபாய் பரிசு வழங்கினார். ஆய்வின் போது, மருத்துவமனையில் இல்லாத வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவர் ஒருவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்புகொண்டு, விளக்கம் கேட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்