அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கு... ஐகோர்ட் நீதிபதி போட்ட உத்தரவு

x

அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த புலன் விசாரணை அதிகாரி பூமிநாதனை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலைக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் உண்மையை கண்டறியும் நோக்குடன் விசாரணை நடத்தப்படவில்லை எனவும், உரிய ஆதாரங்களை தாக்கல் செய்த பிறகும் அரசியல் பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டதாகவும் அமைச்சரின் மனைவி மணிமேகலை தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அமைச்சர் தாக்கல் செய்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதில்மனு தாக்கல் செய்த அப்போதைய புலன் விசாரணை அதிகாரி பூமிநாதனை நேரில் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கை வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்