"எவ்வளவு தடை வந்தாலும்.. மக்களுக்காக நாங்கள் எதையும் செய்வோம்.." - அடித்து பேசிய அமைச்சர்

x

எவ்வளவு தடை வந்தாலும் வள்ளலார் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைப்பது உறுதி என்று, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் 100 கோடி மதிப்பீட்டில் சர்வதேச மையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்டு பேசிய வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வள்ளலாரின் கொள்கையை உலக அளவிற்கு கொண்டு செல்ல யார் தடையாக வந்தாலும் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்