மிலாது நபி கோலாகல கொண்டாட்டம்.. மேளம் அடித்தபடி ஊர்வலம் சென்ற மாணவர்கள்

x

நாகை மாவட்டம் நாகூர் தர்காவில், மிலாது நபி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. நபிகள் நாயகத்தின் பிறந்தநாளையொட்டி, நாகூர் தர்காவில் இருந்து மிலாது நபி பேரணி தொடங்கியது. நூல்கடைத்தெரு, மியான்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் சென்ற மாணவ - மாணவிகளை மலர் தூவி வரவேற்ற பலர், அவர்களுக்கு குளிர்பானம், சாக்லேட் உள்ளிட்ட பொருட்களை அளித்தனர்


Next Story

மேலும் செய்திகள்