கல்லூரி மாணவி கழுத்தை கரகர வென அறுத்த முறைமாமன்-சிக்கிய கடிதம்.. மாமன் வெளியிட்ட பகீர் வீடியோ

x

நாட்டறம்பள்ளி அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்மாமனை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி ஜீவிதா. இவரும், அவரது தாய் மாமனான சரண்ராஜும் காதலித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களாக சரண்ராஜுடன் பேசுவதை ஜீவிதா தவிர்த்து வந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த மாணவியை சரண்ராஜ் காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு மாணவி மறுத்ததால், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்த சரண்ராஜ், தானும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்து தப்பியதாக தெரிகிறது. தகவலின் பேரில் மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்