இன்ஸ்டாவில் மெசேஜ் - மூன்று நாளில் காதல் ,கல்யாணம் - சிசுவை கொன்ற கொடூர தாய்

x

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த விஜயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை பெருங்குடியை சேர்ந்த சத்யா என்ற பெண் அறிமுகமாகி, காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பழகிய 3 நாட்களில் வீட்டை விட்டு வெளியேறிய சத்யா, காதலன் வீட்டிற்கு சென்ற நிலையில், ரமேஷின் குடும்பத்தினர் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில், திடீரென வீட்டில் இருந்த குழந்தையை காணவில்லை என சத்யா கூச்சலிட்டுள்ளார். குழந்தையை யாரேனும் கடத்திச் சென்றுவிட்டார்களா? என்ற அச்சத்தில் உறவினர்கள் அங்கும் இங்கும் தேடிய நிலையில், இதுதொடர்பாக காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த சூழலில், வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள கிணற்றில், பிஞ்சு குழந்தை இறந்து மிதந்ததைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்