மருத்துவரை தொடர்ந்து மருத்துவ மாணவிக்கு காய்ச்சல் - ஒரே நாளில் 5 பேர்..தீவிரமாய் பரவும் நோய்

x

திருவாரூர் மாவட்டத்தில் இன்று மட்டும் மருத்துவ மாணவி உள்பட ஐந்து பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று மட்டும் ஹோமியோபதி மருத்துவ மாணவி உள்பட ஐந்து நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் இருபது நபர்கள் காய்ச்சல் காரணமாக உள் நோயாளிகளாக இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 9 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே திருவாரூர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்த கேரள மாநிலத்தை சேர்ந்த சிந்து என்ற மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதால் காய்ச்சல் குறித்த அச்சம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்