யானைமலை மாரத்தான் போட்டி...துவக்கி வைத்தார் மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ

x

மதுரையில் 14-ஆவது யானைமலை மாரத்தான் போட்டியை மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த மலையில் உள்ள கிரானைட் வளங்களை கொள்ளை அடிக்க சிலரின் தவறான வழிகாட்டுதலின் பேரில், 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலையை சிற்ப நகரமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது என்றார். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போராட்டம் அறிவித்ததால் அந்த அரசாணை திரும்ப பெறப்பட்டது என்றும் அவர் கூறினார். அப்போதிருந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 14 ஆண்டுகளாக யானைமலை மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்