சித்தர்காட்டில் இறந்து கிடந்த ஆடு... இடம்பெயர்ந்து சென்றதா சிறுத்தை..? - பீதியில் மக்கள்

x

10 கேமராக்கள் மற்றும் 3 கூண்டுகளை வைத்து மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தின் கருவைக்காடு பகுதியில் சிறுத்தையை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இரவு நேரங்களில் நடைபெற்ற இந்த தேடுதல் பணியின்போது.. பொதுமக்களும் வனத்துறையினரை பின் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சிரமத்திற்குள்ளான அதிகாரிகள், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கோரியிருக்கும் நிலையில், பொதுமக்களிடம் இடையூறு செய்ய வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிய வைக்கப்பட்ட 10 கேமராக்களிலும் சிறுத்தை சிக்காத நிலையில், தொடர்ந்து சித்தர்காடு, கூறைநாடு, செம்மங்குளம் என சிறுத்தை நகர்ந்து கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில், சித்தர்காடு தண்டபாணி செட்டி தெருவில், ஆடு ஒன்று சிறுத்தையால் கழுத்தில் தாக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்