சாலையில் கொட்டி கிடந்த சாமந்தி பூக்கள்.. போட்டி போட்டு அள்ளிய வாகன ஓட்டிகள்

x

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியில் பூக்களின் விலை வீழ்ச்சியடைந்ததையடுத்து, சாமந்தி, பட்டன் ரோஸ் பூக்களை விவசாயிகள் சாலையில் கொட்டி சென்றனர். தற்போது சாமந்தி, பட்டன் ரோஸ் ஆகிய பூக்கள் ஒரு கிலோ 2 ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். எனவே, ஒசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் அறுவடை செய்யப்பட்ட டன் கணக்கிலான பூக்கள் கொட்டப்பட்டன. அதனை, வாகன ஓட்டிகள, பைகளில் அள்ளி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்