காட்டிற்குள் தனியே சென்ற மங்கம்மாள்... கழுத்தை டவலால் கொடூரமாக இறுக்கி... - ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் - மிரண்ட போலீஸ்

x

திருப்பத்தூர் மாவட்டம் வெள்ளக்குட்டை பகுதியில், நூறுநாள் வேலைத்திட்ட ஊழியரான மங்கம்மாள் என்ற பெண், காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பெண்ணின் உறவினரான சங்கர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சங்கர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், காப்புக்காட்டிற்கு தனியாக சென்ற மங்கம்மாளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், அதற்கு இசையாததால் மங்கம்மாளை தலையில் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்பு மங்கம்மாளின் கழுத்தை டவலால் இறுக்கி கொலை செய்து, காதில் இருந்த கம்மல், கழுத்தில் இருந்த தாலியை எடுத்துக் கொண்டு, சடலத்தை புதரில் வீசிவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சங்கரிடமிருந்து டவல், கத்தி, கம்மல் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சங்கரை சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்