வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல்.. 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... மானாமதுரையை உலுக்கிய சம்பவம் - “முகம் சிதைக்கும் சீரியல் கில்லர்ஸ்.“ குலை நடுங்க வைத்த கொலைகள்

x

சிவகங்கை அருகே, வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல், 3 பேரை சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களை குலைநடுங்க வைத்துள்ளது.

மானாமதுரை அருகே கிருங்காங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனி ஆண்டவர் என்பவரது வீட்டில், அவருடன், கலைச்செல்வன் மற்றும் மருது ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள், திடீரென வீட்டின் உள்ளே புகுந்து, மூவரையும் சரமாரியாக வெட்டினர். இதில் மருது, முகம் சிதைக்கப்பட்டு கொடூரமான முறையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பழனி ஆண்டவர் மற்றும் கலைச்செல்வன் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த பழனி ஆண்டவர் மற்றும் கலைச்செல்வனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மானாமதுரை பகுதியில் ஏற்கனவே 3 பேர் முகம் சிதைத்து கொல்லப்பட்டுள்ள நிலையில், இது நான்காவது சம்பவமாக அரங்கேறியுள்ளது. முகம் சிதைத்து கொலை செய்வதை, மர்மநபர்கள் தங்களது முத்திரையாக பயன்படுத்தி வருவதாக கூறப்படும் நிலையில், மர்மகும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்