தன்னுடைய பைக் மாதிரியே அசால்ட்டாக தள்ளிட்டு போகும் பலே திருடன் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, அடுத்தடுத்து 2 இருசக்கரவாகனங்களை திருடிய நபரை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அய்யலூர் பேரூராட்சி வணிக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு திருடிய மர்மநபர், அய்யலூர் கடவூர் பிரிவு சாலையில் மற்றொரு இருசக்கர வாகனத்தை திருடும் போது பொதுமக்களிடம் சிக்கினார். போலீசாருக்கு தகவலளித்த பொதுமக்கள், திருட்டில் ஈடுபட்டவரை வெளுத்தெடுத்தனர். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்த நிலையில், திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்