போலீசார் கண்முன்னே இளைஞரை தாக்கிய நபர் - அதிர்ச்சி காட்சிகள்

x

வாணியம்பாடியின் நகரப்பகுதியான நியூ டெல்லி சித்திகாப்பாத் பகுதியை சேர்ந்தவர், முகமது கான். இவர் அதே பகுதியில் உள்ள அன்னு என்பவரிடம், ரேஷன் அரிசியை கடத்தும் பணியாளராக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் வேலையை விட்டு நின்று விடவே, தொடர்ந்து வேலைக்கு வர வற்புறுத்தப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு, கொலை மிரட்டலும் வந்துள்ளது. இந்நிலையில் வாணியம்பாடி காவல் நிலையத்தில், இது தொடர்பாக முகமது கான் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசாருடன் வந்த அன்னு, போலீஸ் முன்னிலையிலேயே முகமது கானை தாக்கியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த முகமது கான் தற்கொலைக்கு முயன்றார். அப்போதும் முகமது கான் தாக்கப்பட்டார். இந்த வீடியோ, தற்போது, வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்