விட்டாச்சு விடுமுறை.. கூடிய கூட்டம்.. மாமல்லபுரத்தில் அலைமோதும் மக்கள்

x

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்திற்கு கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். கடற்கரை கோயில், ஐந்தரதம், அர்ச்சுணன் தபசு, பழைய கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன பகுதிகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. கடற்கரையில் குவிந்த பயணிகளில் பலர் அலையின் அழகை கண்டுரசித்து கடலில் குளித்து மகிழ்ந்தனர். பலர் குடும்பம், குடும்பமாக வந்திருந்ததை காண முடிந்தது. பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை பகுதியில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. மாமல்லபுரம் போக்குவத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் போக்குவரத்து போலீசார் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்த சுற்றுலா வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தபோது அதனை ஒழுங்கு படுத்தி போக்குவரத்தினை சீர்படுத்தினர். பயணிகள் வருகையால் கடற்கரை சாலையில் உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டியது.


Next Story

மேலும் செய்திகள்