4 உயிரை காவு வாங்கிய மாமல்லபுரம் கடல் | Mahabalipuram

x

மாமல்லபுரம் கடலில் மாயமான ஆந்திராவை சேர்ந்த 4 கல்லூரி மாணவர்களின் உடல்களும் மீட்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மாமல்லபுரம் கடற்கரையில் குளித்தபோது, எதிர்பாராவிதமாக மூழ்கியுள்ளனர். ஒரு மாணவரின் உடல் மட்டும் உடனடியாக கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது. இதையடுத்து மாயமான மீதமுள்ள 4 பேரையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தீயணைப்புத் துறையின் ஆழ்கடல் வீரர்கள், 4 பேரின் உடல்களையும் மீட்டனர். மாமல்லபுரம் போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு, உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்