கீழடி அகழாய்வு அறிக்கைகளை வெளியிடக் கோரி மனு - உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் ரியாக்‌ஷன்

x

கீழடி அகழாய்வு அறிக்கைகள் குறித்த வழக்கின் விசாரணையை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்தது. இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், கீழடியில் நடைபெற்ற 4 முதல் 9-ஆம் கட்ட அகழாய்வு அறிக்கைகளை, தமிழக அரசு வெளியிட்டதாகவும், மத்திய அரசு நடத்திய முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கைகள் வெளியிடப்படவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கைகளை வெளியிடக் கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், விரிவான விசாரணைக்காக நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்