விசாரணைக்கு சென்றவர்... அதிர்ச்சி மரணம்... ஷாக்கில் உறைந்த குடும்பம்... மதுரையில் பரபரப்பு

x

மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதி, அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவத்தில், குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை, யாகப்பா நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கிற இட்லி கார்த்திக் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 3ஆம் தேதி வழிப்பறி வழக்கு தொடர்பாக, கார்த்திக்கை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே, கார்த்திக்கிற்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் தான் மகன் இறந்ததாக, கார்த்திக்கின் தந்தை கணேசன் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதி கேட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பாக, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பதற்றம் அதிகரித்தது. உயிரிழந்த கார்த்திக்கிற்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்