தமிழகத்தை உலுக்கிய மதுரை ரயில் விபத்து - இருவர் கைது-போலீஸ் அதிரடி-சோதனையில் சிக்கிய பொருட்கள்

x

மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் கேஸ் கசிவால் சிலிண்டர் விபத்து ஏற்பட்ட நிலையில், மதுரையில் சட்ட விரோதமாக கேஸ் நிரப்பிய 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

மதுரையில் கடந்த சனிக்கிழமை ஆன்மிக சுற்றுலா வந்தவர்களின் ரயில் பெட்டியில், கேஸ் கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்தல் 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக சிலிண்டர்களில் கேஸ் நிரப்பபடுகிறதா என்பது குறித்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, மதுரை மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை மேற்கொண்டபோது, அதில், உரிய ஆவணமின்றி 64 கேஸ் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. கிராமப் பகுதிகளில் இருந்து கேஸ் சிலிண்டர்களை வாங்கி, அவற்றில் கேஸ் நிரப்பி வணிக பயன்பாட்டுக்கு கள்ளச் சந்தையில் அவர்கள் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிலிண்டர்களை கடத்தி வந்த பழனி, வினோத் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன், அவர்கள் கடத்தி வந்த 64 சிலிண்டர்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்