பைக்கில் சென்றவரை வழிமறித்து கண்மூடித்தனமாக தாக்கிய கஞ்சா கும்பல்-மனதை பதற வைக்கும் சிசிடிவி காட்சி

x

மதுரை சித்திரை திருவிழாவில், நகருக்குள் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த இளைஞர்கள், பைக்கில் சென்ற நபர் ஒருவரை வழிமறித்து கண்மூடித்தனமாக தாக்கும் சிசிடிவி வெளியாகி பரவி வருகிறது. மதுரை ஒத்தகடையை சேர்ந்த காண்பாய் என்பவர், பணி முடிந்து வீடு திரும்பும் போது, கஞ்சா போதைக் கும்பலால் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த காண்பாயை மீட்டு அக்கம்பக்கத்தினர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவருக்கு 20க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 10க்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் குறித்தான சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்