ஆபரேஷன் செய்து காப்பாற்றப்பட்ட கண்ணாடி விரியன் பாம்பு - வைரலாகும் வீடியோ

x

மதுரையில் காயம்பட்ட கண்ணாடிவிரியன் பாம்பை, அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப்பட்டுள்ளது. நாகர் பகுதிக்குட்பட்ட ஜோசப் நகர் பகுதியில் வேலியில் சிக்கி காயமடைந்த 4 அடி கண்ணாடி விரியன் பாம்பை, வீட்டின் உரிமையாளர் வாசுதேவனும் பாம்புபிடி வீர‌ர் சகா என்பவரும் மீட்டனர். பின்னர், பழங்காந‌த்தம் கால்நடை மருத்துமனையில் பாம்புக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 12 தையல் போடப்பட்டு, அடர் வனப்பகுதியில் பாம்பு விடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்