தங்கையின் தோழிக்கு அண்ணன் விரித்த வலை - போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

x

மதுரை திருமங்கலம் அருகே பள்ளி மாணவிக்கு தொடர்ச்சியாக காதல் தொல்லை கொடுத்து வந்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர். கரிசல்பட்டியைச் சேர்ந்த அழகுபாண்டி என்ற இளைஞர், பள்ளியில் படிக்கும் தனது சகோதரியின் தோழிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய நிலையில், அவருக்கு அழகுபாண்டி செல்போனிலும், நேரில் சென்றும் காதல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அந்த இளைஞரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்