"மதுரை ரயில் நிலையம் முன்பு வரப்போகும் அடையாளம்" - ரயில்வே மேலாளர் சொன்ன தகவல்

x

பாம்பன் புதிய கடல் பாலம், இந்தாண்டிற்குள் திறக்கப்படும் என, மதுரைக்கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைகை எஸ்பிரெஸ் ரயிலில் எலித்தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இதுபோன்ற பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கு எந்த திட்டமும் இல்லை என்றும் அவர் கூறினார். மதுரை - போடி மின்மயமாக்கல் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது என்ற ஸ்ரீ வத்சவா, மதுரை ரயில் நிலையம் முன்பு மீன்சின்னம் கண்டிப்பாக வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்