மதுரையில் துப்பாக்கியோடு வலம் வந்த இளைஞர்... போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

x

மதுரையில் தடை செய்யப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த 28 வயது நபரை போலீசார் கைது செய்தனர். முத்துபட்டி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, வீரபாண்டி என்பவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட துப்பாக்கி, 35 டம்மி தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், திவாகரன் என்பவரிடம் துப்பாக்கி வாங்கியது தெரியவர, இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் இவர்களுக்கு துப்பாக்கி சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்