கலெக்டர் ஆபிஸிற்கு தலையில் செம்புடன் வந்து மனு கொடுத்த நபர்

x

மதுரையை சேர்ந்த தன்னார்வலர் கணேஷ் பாபு என்பவர் அளித்த மனுவில், வாடிப்பட்டி அருகே உள்ள முள்ளி பள்ளம் கிராமத்தில் யாராவது இயற்கை எய்தினால் நீர் மாலை எடுக்க குளித்து வர தண்ணீர் தொட்டி இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறியுள்ளார். இதனால் கிராமத்தில் விவசாயிகள் சங்கத்தொட்டி என்ற பொது தொட்டியில் குளித்து, நீர்மாலை எடுத்தும், இறுதி சடங்கு முடித்தும் குளித்துச்செல்லும் நிலை இருப்பதாக கூறியுள்ளார்.

நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து புதிதாக குளியல் தொட்டி அமைப்பதற்கு ஆணை பிறப்பித்து அதற்கான வேலைகளும் தொடங்கிய நிலையில், அதை ஊராட்சி மன்ற நிர்வாகிகளும், அரசு அதிகாரிகளும் நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, நீர் மாலை எடுத்து வர குளியல் தொட்டி கட்டி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்