சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவராக வாகைசூடியது யார்?

x

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவராக, வழக்கறிஞர் மோகனகிருஷ்ணன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்தில் 7 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடைபெற்றது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், மூத்த மற்றும் இளைய செயற்குழு உறுப்பினர்கள் என 16 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 124 பேர் போட்டியிட்ட நிலையில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவில் 3 ஆயிரத்து 476 வழக்கறிஞர்கள் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து தலைவர் பதவிக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், அதிகபட்சமாக ஆயிரத்து 272 வாக்குகள் பெற்ற மோகன கிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். துணைத்தலைவர், பொருளாளர், நூலகர் உள்ளிட்ட மற்ற பதவிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்