சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை சுத்து போட்ட வெறிநாய்கள் - 3 பெண் காவலர்களை கடித்து அட்டகாசம்

x

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், வெறிநாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.

சென்னை காவல் ஆணையரகத்தில், அன்றாடம் ஏராளமானோர் வந்து செல்லும் சூழலில், அங்கு15-க்கும் மேற்பட்ட நாய்கள் சுதந்திரமாக திரிகின்றன. அவற்றுக்கு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களே உணவளிப்பதாக கூறப்படும் நிலையில், அலுவலகத்தின் 8-வது தளம் வரை அவை கட்டுப்பாடின்றி சுற்றித்திரிகின்றன. இந்நிலையில், அலுவலகத்தில் திரியும் நாய்களில் வெறிபிடித்த 2 நாய்கள் 3 பெண் காவலர்கள் உட்பட 4 பேரை கடித்துள்ளது. இதனையடுத்து நாய்களை பிடிக்க மாநகராட்சி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால், நாய்கள் அனைத்தும் தப்பி ஓடிய நிலையில், அவற்றை ப்ளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்