என்.எல்.சி. சார்பில் கட்டப்படும் பாலம் - தொட்டவுடன் இடியும் சுவர்.. பேரதிர்ச்சியில் மக்கள்

x

சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சியால் கட்டப்பட்டு வரும் பாலம் தரமற்று இருப்பதால், அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். கத்தாழை கிராமத்தில் பரவனாற்றில் புதிய பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. பாலம் தரமற்று இருப்பதால், கிராம மக்கள் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பக்கவாட்டுச் சுவரை தொட்டாலே இடிந்து விழுவதாக பொதுமக்கள் கேள்வி எழுப்பி வாக்குவாத‌த்தில் ஈடுபட்ட போது, அதிகாரிகள் மௌனமாக இருந்தனர். இதையடுத்து, பக்கவாட்டுச் சுவர் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. தரமற்ற முறையில் பாலம் கட்டப்படுவதை, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்