காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி - துரத்தி வந்த பெற்றோர்.. போலீசிடம் கதறும் காதலர்கள்

x

ஓமலூர் அருகே பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்த ஜோடி, ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டு ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

சேலம் மாவட்டம் பாகல்பட்டி கிராமத்தை சேர்ந்த கிருபாகரனும், அம்மாபாளையத்தை சேர்ந்த மோனிகாவும், ஒரே பள்ளியில் படித்த போதில் இருந்தே இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், மோனிகா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், காதல் ஜோடி மோனிகா, கிருபாகரன், வீட்டை விட்டு வெளியேறி ஓமலூர் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டு, பாதுகாப்பு கேட்டு ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதனிடையே பெண் காணவில்லை என்றும் கடத்தப்பட்டதாகவும் மோனிகாவின் பெற்றோர் சேலம் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர். காதல் ஜோடி ஓமலூரில் இருப்பதை அறிந்து அவர்கள் வந்து சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்