வைக்கோல் ஏற்றி வந்த லாரி...திடீரென பற்றி எறிந்த தீ - கரூர் அருகே பரபரப்பு

x

குளித்தலை அருகே வைக்கோல் ஏற்றி வந்த சரக்கு வாகனம் மின்கம்பியில் உரசியதில் முழுவதும் எரிந்து நாசமானது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சின்னப்பனையூர் வழியாக வைக்கோல் ஏற்றி கொண்டு ஈச்சர் சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்தது. சாலையின் குறுக்கே இருந்த மின்கம்பி உரசியதில் வைக்கோல் கட்டுகளுடன் லாரி மளமளவென எரிய தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.


Next Story

மேலும் செய்திகள்