நடுவழியில் அமைச்சர் சிவசங்கர் காரை திடீரென வழிமறித்த பறக்கும்படையினர்... அரியலூரில் பரபரப்பு!

x

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டத்திற்கு சென்ற சிவசங்கர் காரை, அஸ்தினாபுரம் அருகில் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையிலான பொருட்கள் இல்லாததை உறுதி செய்த பின்னர் சோதனையை அதிகாரிகள் நிறைவு செய்தனர். இதன் பின்னர், அமைச்சர் சிவசங்கர் தனது பயணத்தை தொடர்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்