பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் மீது போலீசில் புகார்... மதுரையில் பரபரப்பு

x

பாஜக தேர்தல் பத்திர நிதி வசூல் தொடர்பாக பிரதமர் மோடி உள்ளிட்டோர் மீது மதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவர் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் பாஜக தலைவர் நட்டா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், கூட்டுச் செய்தியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் மீதும், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ஆகிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்