"எனக்கு AK 47 துப்பாக்கியுடன் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்". காவல் அலுவலகத்தை முற்றுகையிட்ட வேட்பாளர்

x

கழுத்தில் பண மாலையுடன் காவல் ஆணையர் அலுவலகம் வந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர், தனக்கு ஏகே 47 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அக்னி ஆழ்வார் என்பவர், தருமபுரி மற்றும் மத்திய சென்னை மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். கழுத்தில் பணமாலையுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்தவர், தேர்தல் களப்பணியில் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ஏகே 47 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டது பேசு பொருளாகியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்