"இரவில்தான் சிறுத்தை வெளியே வரும்" - "ஆபத்தான பகுதிகளில் 5 பொதுத்தேர்வு மையங்கள்" - மாவட்ட ஆட்சியர்

x

"இரவில்தான் சிறுத்தை வெளியே வரும்" - "ஆபத்தான பகுதிகளில் 5 பொதுத்தேர்வு மையங்கள்" - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

#mayiladuthurai #cheetah #schools #thanthitv

மயிலாடுதுறையின் கூறைநாடு பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்த நிலையில், அப்பகுதியில் உள்ள 7 பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கூறைநாடு பகுதியில் உள்ள 5 பள்ளிகள் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு மையங்களாக இருக்கும் சூழ்நிலையில், அப்பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு அளிப்பார்கள் என கூறிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, வனத்துறையினர் சார்பில் கன்ட்ரோல் ரூம்கள் திறக்கப்பட்டிருப்பதாகவும், பொதுமக்கள் யாரும் இரவில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் கூறி எச்சரிக்கையும் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்