கழுத்தை கவ்வி கொடூரமாக பெண்ணை தாக்கிய சிறுத்தை - நீலகிரியில் பயங்கரம்

x

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இரண்டு பெண்களை சிறுத்தை தாக்கிய சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் .பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஏலமன்னா பகுதியில் இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த சரிதா என்ற பெண்மணியை சிறுத்தை தாக்கியதால், அவர் கழுத்து பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, உடனே அவர் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதே போல், துர்கா என்ற பெண்ணையும் சிறுத்தை தாக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்