மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீ - 5 பேருக்கு நேர்ந்த கதி

x

பெரு நாட்டில் இரும்பு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ரசாயனப் பொருட்கள் வெடித்துச் சிதறின. ரசாயனப் பொருட்கள் வெடித்துச் சிதறியதால் மளமளவென பரவிய தீ, கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியில் வானுயர கரும்புகை எழுந்தது. தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். ரசாயனப் பொருட்கள் வெடித்துச் சிதறியதற்கான காரணங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்